Current Date:மார்ச் 28, 2024

நீரிழிவுடையவர்களில் ஐந்தில் ஒரு நபர் மனச் சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது நிலைமைகளைத் தொடர்ச்சியாகப் பராமரித்துக் கொண்டிருக்க வேண்டிய அழுத்தம் மனச் சோர்வாக உணர்வதற்கு வழிவகுக்கிறது. இது உங்களது நிலைமைகளைக் கண்காணித்துக் கொள்ளக் குறைவான உந்துதலையே தரக் கூடியது. முக்கியமாக உடற் பயிற்சி செய்வதற்கும், சரியான நேரத்தில் சீரான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும், மற்றும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்வதற்குமாகும். நீரிழிவுக்கு மத்தியில் மனச் சோர்வினை உண்டாக்கும் காரணிகள் யாவை? நோயறியப்பட்டிருத்தல் நீங்கள் உட்கொள்ளும் உணவு அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதாக உணர்ந்து வாழ்க்கையின் முக்கிய பாகங்களை இழத்தல் நீண்ட காலச் சிக்கல் தன்மைகளுக்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கூறப்பட்டிருத்தல் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் உங்கள் சக்கரையின் அளவினைக் கட்டுப்படுத்த உதவுவதாகத் தோன்றாதிருத்தல் மேம்படுத்தப்பட்ட நீரிழிவின் சிக்கல் தன்மைகளால் பாதிக்கப்பட்டிருத்தல் உங்களுக்கோ அல்லது நீங்கள் அறிந்த எவருக்குமோ மனச் சோர்வின் அறிகுறிகளை ஆரம்ப நிலையில் இனங்கண்டு கொள்வது மிகவும் அவசியமும் மற்றும்; விரைவில் உதவியினைப் பெறுவதற்கும் வழிவகுக்கும். .

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன